தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

புதன், 23 பிப்ரவரி, 2011

வினாவிடை-1

(1)சங்கீதம் என்றால் என்ன?


சங்கீதம்
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் 
உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் "
"பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது.
அதனை ஒலிப்பதால் வருவது சங்கநாதம்”
ஆகும் "கழுத்துப் பகுதியான தொண்டை
யிலிருந்து வரும்கீதம்தான் சங்கீதம் ஆகும் .
இச்சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது,
செவிக்கும்மனதிற்கும் இன்பம்தரவல்லது
என இசையின்பெருமையை பலபெரியவர்
கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து
கூறியுள்ளனர்.மனிதர்கள்மட்டுமன்றி
மிருகங்கள் அனைத்தையும்வசப்படுத்த
கூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.
அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள்
இசையின்பெருமையை எடுத்து காட்டு
கின்றன. அதற்கு உதாரணமாக சிவனின்
கையில்உடுக்கையும் சரஷ்வதியின்
கையில்வீணையும்கண்ணனின் கையில்
புல்லங்குழலும் இருப்பதை நாங்கள்
காணலாம்.அத்துடன் உடல் நோய்களை
மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது
என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து
கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை
கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும்
எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை
ஒருமுகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த
பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.